சுஜாதா !!!

சொல்லும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது.
என்ன மாதிரி எழுத்து யா?? சே, ஒரு சூரியன், ஒரே ஒரு அஞ்சா நெஞ்சன் இந்த மாதிரி புருடா கெல்லாம் நடுல ஒரே ஒரு சுஜாதா தான்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும். சுஜாதா இயல்னு புதுசா தமிழ் இலக்கியத்துல ஒரு பிரிவு கொண்டு வந்தா, அதுக்கு முதல் ஆதரவு குரல் என்னோடது தான்.:-)

இன்னும் அழகா நியாபகம் இருக்கு! ஒன்பதாவது படிக்கும் போது, விகடன்ல கற்றதும் பெற்றதும்ல ஆரம்பிச்சது. அம்மா கிட்ட பிறகு சுஜாதா பத்தி கேட்டு, புத்தகங்களை தேடி படிக்கச் ஆரம்பிச்சு, இன்னைக்கு வரைக்கும் அந்த எழுத்து மேல உள்ள ஆச்சர்யம் குறையாம இருக்கேன். சுஜாதா நூல் எதையாவது எடுக்கும் போதெல்லாம் விரல் தானா மூக்குக்கு போய்டுது ;-)

இளமை, வசீகரம், ஆழமான அதே சமயம் எளிமையான கருத்து, நக்கல், நையாண்டி, அழகான நடை என்ன தான் இல்ல?? என்னோட முக்கால்வாசி கருத்துக்களுக்கும் சுஜாதா சொல்ற கருத்துக்களுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கும். கடவுள நம்புறதுல தொடங்கி, சூப்பர் ஸ்டார் சினிமா வர. :-S . ஆனாலும் அந்த முரண்பட்ட எழுத்துகள் மேல கூட ஒரு தனி காதல் எனக்கு. Tat's சுஜாதா!

தொப்புள்ள பஞ்சு வரதுல இருந்து குவாண்டம் physics, சங்க கால இலக்கியம், எங்க காலத்து காதல் வரைக்கும் ஒரே நூல்ல எழுதுறது உங்களால தான் BOSS முடியும்!! உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு கட்ட முடியாத ஒரு நிகழ்வு:-( We really miss you dude!

என்னடா இவன் திடீர்னு சுஜாதா பத்தி பேச ஆரம்பிச்சுட்டான்னு பாக்குறீங்க :-S
சுஜாதாவின் 50 விஞ்ஞான சிறுகதைகள் னு ஒரு அருமையான நூல் கைல தவழ்ந்துட்டு இருக்கு!!
அதோட பாதிப்பு தாங்க:-)

0 comments: