சவுக்கடி கவிதை -1 (பார்பன சதிகள்! )
Posted On Wednesday, April 8, 2009 at at 5:55 PM by Azhagu Selvan SP“ சாதி மான்கள் சதித்துக் கொன்ற
மதுரை வீரனுக்கே
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாம்
திண்ணியத்தில் மட்டுமல்ல
தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது பீயை
என்சனம்”
ச.தமிழ் செல்வனின் வலை பூவில் கண்டது.
கவிஞர் மதி வண்ணனின் கவிதை என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கவிதையின் பின்னணியையும் அவரே விளக்கியுள்ளார்.
"அதிலிருந்து,
சிவன்,விஷ்ணு,அல்லா,ஏசு என எல்லாப் பெருந்தெய்வங்களுக்கும் புனிதமான பிறப்புக்கதைகள்
இருக்க மக்கள் சாமிகளான மாரியாத்தா ,காளியாத்தாக்களெல்லாம் சாதாரணமாக
சாணி பொறுக்கப் போன இடத்தில் ஆதிக்க சாதியாரால் வல்லாங்கு செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டவர்களாகவோ மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து
உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்
கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்."
சே, எவ்வுளவு ஏமாளி பிண்டங்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!! :-)