பொருளாதார சீரழிவு- கணினியாளனின் பார்வையில்!
Posted On Wednesday, April 15, 2009 at at 2:49 PM by Azhagu Selvan SPசமீபத்தில் விகடனில் இக்கவிதையை சந்திக்க நேர்ந்தது.
கவிஞர்- செல்வேந்திரன்
தலைப்பு-கற்றதனால் ஆன பயன்...
எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிளித்தீர்கள்
பெண் குடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பளத்தின்
பெரும் பகுதியை
வரியென புடுங்குனீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களில் இருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டுனீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுதெருவுக்கு வந்து விட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றி
கேட்கிறோம்....
' கணினி மொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம் ?'