வெட்டுபுலி - தமிழ்மகன்!
Posted On Thursday, May 16, 2013 at at 1:10 AM by Azhagu Selvan SPராவணன்!
Posted On Saturday, June 19, 2010 at at 3:30 PM by Azhagu Selvan SPகாடு, மேடு பாறை, அருவியில் எல்லாம் சுத்தி சுழன்று பிரமிக்க வைக்கும் காட்சிகள்,
மிரட்டலான நடிப்பு, சண்டை காட்சிகள். அதுவும் அந்த தொங்கும் பாலத்தில் நடக்கும் உச்சகட்ட சண்டை காட்சி, அப்படியே மயிர் கூச்செறிய வைக்கிறது! நெடுநாளைக்கு இந்திய சினிமாவில் பேசப்படும்.
விவரிக்க முடியாத அளவுக்கு சிறப்பான இசை, ஒளிப்பதிவு, இயக்கம் இன்ன பிற,
சிறப்பாக இல்லையென்றாலும், குறை ஒன்றும் சொல்ல முடியாத திரைக்கதை, வசனம்!
ஆக, இதுல்லாம் சேர்த்து ராவணனை இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக நிறுத்தி விடும்.
மணி மறுபடியும் தன்னை அழுத்தம் திருத்தமாக நிருபித்து விட்டார்!
ஆனாலும் இராவணன், என்னை போன்ற ஒரு சாமானிய தமிழ் ரசிகனுக்கு அந்நியமாகவே கடந்து போகிறான்.
இது எங்கள் ஊர் கதை அல்லவே! படத்தில் தமிழ்நாட்டு அடையாளங்கள் சுத்தமாக இல்லை :( எதோ ஆங்கில, அல்லது இந்தி படத்தை டப்பிங்கில் பார்த்தது போல் இருக்கிறது.
ஈழம் - ஞாநி - அறிவுமதி!
Posted On Tuesday, April 20, 2010 at at 1:14 PM by Azhagu Selvan SPஞாநியின் எழுத்துகளை, அவரது நிறைய கருத்துகளை விரும்பி படித்தாலும் ஈழம், சிங்கள இனவாதம் குறித்து அவர், "தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக, ஜனநாயக முறையில் அனைத்தையும் மறந்து விட்டு வாழவேண்டும்" என்கின்ற தொனியில் எழுதும் போது, உச்சபட்ச கோபத்தில் சில பல கெட்டவார்த்தைகளை மனதிற்குள் முனுமுனுப்பேன்! மத்தபடி அதை வெளிபடுத்தும் வார்த்தைகள் வராது.
இப்போது, அறிவுமதி அண்ணனின் இந்த பதிவில், வரும் இவ்வரிகள்,
கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.
நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது
என் கோபத்திற்கு மிகச்சரியான காரணம், அதன் வெளிப்பாடு இந்த வரிகள் தான்!!
மீண்டும் சுஜாதா!
Posted On Friday, March 12, 2010 at at 7:05 PM by Azhagu Selvan SPஅண்ணாத்தையின், "விஞ்ஞான சிறுகதைகள்" தொகுதி முழுவதும் படிச்சு முடிச்சிட்டேன்! என்ன மனுசன்டா சாமி??!!!
எவ்வளோ பெரிய கற்பனை எல்லாம் எனைய மாதிரி tube-light கூட கற்பூரம் மாதிரி புரிஞ்சுக்குற style-ல எழுதுறதுக்கு சுஜாதாவ விட்டா ஆளே இல்ல :D
அவதார் james cameron எல்லாம் பிச்ச எடுக்கணும் போல இவர்கிட்ட!!
"Keep it simple, sweet and stupid!" என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான அறிவியல் முன்னேற்றத்தை, எதிர்பார்க்கப்படும் கண்டுபிடிப்புகளை பாமரனின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது!
அதாவது கணினி உலகில் கூறப்படும் abstraction - தேவையான தகவல்களை *மட்டும்* தேவையானவர்களுக்கு தருவது - என்றதன் அடிப்படையில், ஒரு சாதாரண வாசகன் ஒரு விஞ்ஞான கதையில் வரும் சயின்ஸ் சமாச்சாராங்களை
அல்வா சாப்டற சந்தோசத்துடன் படிக்கச் செய்து, அதன் பின்னால் இருக்கும் இடியாப்ப சிக்கல் அறிவியல் கோட்பாடுகளை லேசாக தொட்டு சென்றுள்ளார். :)
மொத்தத்தில் ஒரு மிக சிறந்த புத்தகம்!
உயிர்மை வெளியீடு.
வீர வணக்கம்!
Posted On Friday, January 29, 2010 at at 12:21 AM by Azhagu Selvan SPநாளை எம் இனத்திற்காக இன்னுயிர் ஈத்த திரு.முத்துகுமரன் அவர்களின் முதல் வருட நினைவு நாள்.
இங்கே மதுரையில் பாராளுமன்றத்தில் தைரியமாக உட்காந்திருக்க கூட வக்கில்லாத அஞ்சா கு, சாரி நெஞ்சனுக்கு பிறந்த நாளாம். ஊரையே மறைத்து விளம்பர தட்டிகள் வைத்து அசிங்கபடுத்தி இருக்கிறார்கள்.
நடுவுலே ஏதாவது உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தும் தட்டிகள் வைத்தல் கூட தெரியாது போல :(
சரி நம்மளால முடிஞ்சது - ஒரு பதிவாவது எழுதுவோம்னு....
நெறைய பேசியாச்சு சொல்லியாச்சு! முத்துகுமரன் தற்கொலை செய்து கொண்டவர். அவரை எவ்வாறு ஒரு வீரனாக கருத முடியும் என்று நெறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். ஆனா அவருடைய கடைசி கடிதத்தை முழுசாக படித்தவர்கள் உண்மையை புரிந்திருப்பார்கள்.
ஒரு மோசமான நிலைமையை எதிர்கொள்ள தைரியம் இன்றி தப்பிக்க நினைத்து தற்கொலை செய்பவர்கள் கோழைகள்!! தமக்கு போராட களம் கிடைத்தும் அதை தவறவிட்டு, களமிறங்க அச்சம் கொண்டு ஓடுகிறவர்கள் கோழைகள்!! ஆனால் அந்த களம் அமைவதற்கு ஒரு உயிர் வேண்டும், அதற்கு நான் என்னை தருகிறேன் என்று முன்வந்த எங்கள் மாவீரன் முத்துகுமரன்.
தன் உடலையே ஆயுதமாக ஏந்தி போராட வேண்டி அவன் உயிர் நீத்தான்! போரட்டதற்கு அஞ்சி உயிர்நீக்கவில்லை.
அவருடைய கடைசி எழுத்துக்கள் உணர்ச்சிபெருக்கில் உயிர் போகும் அவசரத்தில் எழுதியவை அல்ல! மிக சிறந்த ஆழமான கருத்தாழம் மிக்க ஒருவனுடைய மனக்குமுறலையும், போராட்ட நெறிமுறைகளையும் விளக்குவதாக இருந்தது!!
இத்துடன் அந்த கடிதத்தை இணைத்து நான் இட்ட பதிவின் லிங்கை[1] இணைத்துள்ளேன்.
திரு.முத்துக்குமார் அவர்களுடைய அசைகளில் ஒன்றை கூட நாம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் ஊரை சுரண்டும் படிக்காத தற்குறி _____ ஒன்று இங்கு ஊரையே அசிங்கபடுத்தி பிறந்த நாள் கொண்டாடுகிறது!!
என்ன கேவலமான புழுக்களை போன்ற வாழ்க்கை இது??
[1] http://azhaguselvan.blogspot.com/2009/02/blog-post.html
பொங்கல் - என்னத்த சொல்ல!!
Posted On Friday, January 15, 2010 at at 11:54 PM by Azhagu Selvan SPதனிப்பட்ட முறைல இந்த தடவை பொங்கல் ஒன்னும் சிறப்பா கொண்டாட முடியாத சூழ்நிலை எனக்கு :(
ஆனா ஒரு விஷயம் என்ன னா, எனக்கு வாழ்த்து சொன்ன நண்பர்கள், உறவினர்களில் 95% பேர் சொன்னது "happy pongal" தான். சரி இவனுங்க எவளோ சொன்னாலும் திருந்தாத சொரண கெட்ட திருவாளர்கள் தானேனு நா திருப்பி "பொங்கல் வாழ்த்துகள்" சொன்னா அதுக்கு நக்கலா மேலயும் கீழேயும் என்னை ஒரு பார்வை வேற!!!
என்னத்த சொல்ல!! ஹ்ம்ம்
புத்தாண்டு வாழ்த்துகள் தோழர்களே :)
தெலுங்கானாவும் - என் மனகுமுறல்களும்
Posted On Saturday, December 12, 2009 at at 12:00 PM by Azhagu Selvan SPவணக்கம் !
ஆந்திராவில் நடந்து வரும் தெலுங்கனா பிரச்சனைகளை கவனித்து வருவோர் அனைவரும் கீழ்க்கண்ட கூற்றுகளை புரிந்து கொள்ள முடியும்.
1 . தாம் கொண்ட லட்சியத்துக்காக வீதிக்கு வந்து போராடும் குணம் அம்மக்களுக்கு இருக்கிறது
2 . தன்னலமோ பொது நலமோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போராடும், அழகாக அதை முன்னெடுத்து செல்லும் தலைவர்கள் இருக்கிறார்கள்.
3 . ஆளும் வர்கத்திற்கு வன்முறை தான் செருப்பால் அடித்த மாதிரி புரியும் என்கிற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது. அதை சரியான பாதையில் கொண்டு செலுத்த தலைவர்களும் இருக்கிறார்கள்.
4 . எல்லாம் விட விடாமுயற்சி இருக்கிறது. கொண்ட லட்சியத்துக்காக அசராமல் போராடும், போராட்டத்தை ஊக்கிவிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இக்குனங்களில் ஒரு சில நமக்கும் இருந்திருந்தால் நாம் நமது தமிழ் சொந்தங்களை சிறிதேனும் காப்பாற்றி இருக்கலாமே! இதை போல் உயிர் துறக்க துணிந்த ஒரு தலைவன் எமக்கு இல்லையே.
எங்களை போராட்ட களத்தில் கொண்டு செலுத்த ஒரு தலைவன் நம்மிடம் இல்லையே.
ஒரு சிலர் அழைத்த போதும் வீதிக்கு வர நாம் தயாராக இல்லையே. வெட்கங்கெட்ட தமிழினமே.!!
வன்முறை தான் ஆளுவோருக்கு புரியும் என்று நம்மை யாரும் தெளிய வைக்க வில்லையே! அவ்வாறு போராடிய எம் தலைவனையே, சொந்த சகோதரனையே தீவிரவாதி என்று சொன்ன மக்கள் அல்லவோ நாம்!
நாம் பேசியது தான் இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? ஒரு நாட்டை துண்டாடுவது இறையான்ன்மைக்கு எதிரானது இல்லையா?
பின்னர் எப்படி பொத்தி கொண்டு சம்மதிக்கிறார்கள்??
கேட்கிற விதத்தில் கேட்டால் எவனும் குடுப்பான்.
நாம் இளிச்சவாயர்கள்! நமக்காக கேள்வி கேக்க எவன் இருக்கிறான். அப்படி இருக்க நம் கோரிக்கைகளை எதற்காக அவன் கேட்க வேண்டும்?
சீமான் அண்ணன் சொன்னது போல - "தமிழ் நாட்டில் எவரேனும் தமிழனுக்கு எதிராக எழுதினால் அவன் கை யை மனிகட்டோடு வெட்டி எறிவோம் என்ற பயத்தை நாம் உண்டாக்க தவறி விட்டோம்". அந்த பயம் தான், அந்த வன்முறை பயம் தான் இன்றைக்கு தெலுங்கான வை பெற்று தந்துள்ளது.
இதே பயம் தான் நமக்கும் ஹிந்தி யை விரட்ட உதவியது. அப்போது தன்னலம் கருதா தலைவன் இருந்தான், போராட தூண்டினான், தேவைபட்டால் வன்முறை செய்யவும் கற்று குடுத்தான். இப்பொழுது அப்படி யார் இருக்கிறார்கள்? அல்லது மக்களாகிய நாம் தான் தயாராக இருக்கிறோமா?? 5௦௦ ரூபா குடுத்தால் எவன் நமக்கு முழு எதிரியோ அவனுக்கே ஒட்டு போடு நாம ஜெய்க்க வச்சிடுவோம். அப்புறம் எங்குட்டு போராட்டம் எல்லாம்?!!
கொஞ்சமேனும் நம்மை பற்றிய அக்கறையோ பயமோ இருந்தால் இவ்வுளவு மீனவ சொந்தங்களை சிங்கள பொறிக்கிகள் கொன்ற பிறகும் கச்ச தீவு முடிந்து போன விஷயம் என சாதரணமாக மக்களவையில் SM கிருஷ்ணா அறிவிப்பானா?? அதற்கு சத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க கூட நமக்கு அங்கே பலம் இல்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை செய்த போர் குற்றங்களுக்காக அவர்களுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செயும் மற்ற நிறுவனங்களில் உள்ள அமெரிக்கர்கள் அதற்கு எதிராக ஒட்டு போட வேண்டும் என்றும் மசோதா நிறைவேற்றி உள்ளார்கள். குறைந்தபட்சம் இதை செய்ய நம்மால் முடிந்ததா??
பின்னர் எதற்கு நமக்கு ஒரு தனி மாநிலம், ஒரு முதல்வர் இதல்லாம்??
எனக்கு தெலுங்கனவின் நியாயங்கள் முட்டாள்தனங்கள் பற்றியல்லாம் கவலை இல்லை. எப்பிடி வேணா இருக்கட்டும். ஆனால் அந்த போராட்ட குணமும், ஒரு தலைவனும் நமக்கு இல்லையே என்ற மனக்குமுறல் தான் இந்த வலை பதிவு. இருந்தால் எம் சொந்தங்களின் உயிரை, உறவுகளை காப்பற்றி இருக்கலாமே!!
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன், ஆனால் தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு வெட்க படுகிறேன். கூசி போகிறேன் :(