தெலுங்கானாவும் - என் மனகுமுறல்களும்

வணக்கம் !

ஆந்திராவில் நடந்து வரும் தெலுங்கனா பிரச்சனைகளை கவனித்து வருவோர் அனைவரும் கீழ்க்கண்ட கூற்றுகளை புரிந்து கொள்ள முடியும்.

1 . தாம் கொண்ட லட்சியத்துக்காக வீதிக்கு வந்து போராடும் குணம் அம்மக்களுக்கு இருக்கிறது

2 . தன்னலமோ பொது நலமோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போராடும், அழகாக அதை முன்னெடுத்து செல்லும் தலைவர்கள் இருக்கிறார்கள்.

3 . ஆளும் வர்கத்திற்கு வன்முறை தான் செருப்பால் அடித்த மாதிரி புரியும் என்கிற தெளிவு அவர்களுக்கு இருக்கிறது. அதை சரியான பாதையில் கொண்டு செலுத்த தலைவர்களும் இருக்கிறார்கள்.

4 . எல்லாம் விட விடாமுயற்சி இருக்கிறது. கொண்ட லட்சியத்துக்காக அசராமல் போராடும், போராட்டத்தை ஊக்கிவிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்.


இக்குனங்களில் ஒரு சில நமக்கும் இருந்திருந்தால் நாம் நமது தமிழ் சொந்தங்களை சிறிதேனும் காப்பாற்றி இருக்கலாமே! இதை போல் உயிர் துறக்க துணிந்த ஒரு தலைவன் எமக்கு இல்லையே.

எங்களை போராட்ட களத்தில் கொண்டு செலுத்த ஒரு தலைவன் நம்மிடம் இல்லையே.

ஒரு சிலர் அழைத்த போதும் வீதிக்கு வர நாம் தயாராக இல்லையே. வெட்கங்கெட்ட தமிழினமே.!!

வன்முறை தான் ஆளுவோருக்கு புரியும் என்று நம்மை யாரும் தெளிய வைக்க வில்லையே! அவ்வாறு போராடிய எம் தலைவனையே, சொந்த சகோதரனையே தீவிரவாதி என்று சொன்ன மக்கள் அல்லவோ நாம்!

நாம் பேசியது தான் இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? ஒரு நாட்டை துண்டாடுவது இறையான்ன்மைக்கு எதிரானது இல்லையா?
பின்னர் எப்படி பொத்தி கொண்டு சம்மதிக்கிறார்கள்??
கேட்கிற விதத்தில் கேட்டால் எவனும் குடுப்பான்.
நாம் இளிச்சவாயர்கள்! நமக்காக கேள்வி கேக்க எவன் இருக்கிறான். அப்படி இருக்க நம் கோரிக்கைகளை எதற்காக அவன் கேட்க வேண்டும்?
சீமான் அண்ணன் சொன்னது போல - "தமிழ் நாட்டில் எவரேனும் தமிழனுக்கு எதிராக எழுதினால் அவன் கை யை மனிகட்டோடு வெட்டி எறிவோம் என்ற பயத்தை நாம் உண்டாக்க தவறி விட்டோம்". அந்த பயம் தான், அந்த வன்முறை பயம் தான் இன்றைக்கு தெலுங்கான வை பெற்று தந்துள்ளது.

இதே பயம் தான் நமக்கும் ஹிந்தி யை விரட்ட உதவியது. அப்போது தன்னலம் கருதா தலைவன் இருந்தான், போராட தூண்டினான், தேவைபட்டால் வன்முறை செய்யவும் கற்று குடுத்தான். இப்பொழுது அப்படி யார் இருக்கிறார்கள்? அல்லது மக்களாகிய நாம் தான் தயாராக இருக்கிறோமா?? 5௦௦ ரூபா குடுத்தால் எவன் நமக்கு முழு எதிரியோ அவனுக்கே ஒட்டு போடு நாம ஜெய்க்க வச்சிடுவோம். அப்புறம் எங்குட்டு போராட்டம் எல்லாம்?!!

கொஞ்சமேனும் நம்மை பற்றிய அக்கறையோ பயமோ இருந்தால் இவ்வுளவு மீனவ சொந்தங்களை சிங்கள பொறிக்கிகள் கொன்ற பிறகும் கச்ச தீவு முடிந்து போன விஷயம் என சாதரணமாக மக்களவையில் SM கிருஷ்ணா அறிவிப்பானா?? அதற்கு சத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க கூட நமக்கு அங்கே பலம் இல்லை.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை செய்த போர் குற்றங்களுக்காக அவர்களுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செயும் மற்ற நிறுவனங்களில் உள்ள அமெரிக்கர்கள் அதற்கு எதிராக ஒட்டு போட வேண்டும் என்றும் மசோதா நிறைவேற்றி உள்ளார்கள். குறைந்தபட்சம் இதை செய்ய நம்மால் முடிந்ததா??

பின்னர் எதற்கு நமக்கு ஒரு தனி மாநிலம், ஒரு முதல்வர் இதல்லாம்??

எனக்கு தெலுங்கனவின் நியாயங்கள் முட்டாள்தனங்கள் பற்றியல்லாம் கவலை இல்லை. எப்பிடி வேணா இருக்கட்டும். ஆனால் அந்த போராட்ட குணமும், ஒரு தலைவனும் நமக்கு இல்லையே என்ற மனக்குமுறல் தான் இந்த வலை பதிவு. இருந்தால் எம் சொந்தங்களின் உயிரை, உறவுகளை காப்பற்றி இருக்கலாமே!!

தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன், ஆனால் தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு வெட்க படுகிறேன். கூசி போகிறேன் :(

நாம் தமிழர்!!

வீழ்ந்து விடாத வீரம்! மண்டியிடாத மானம்!!
என்ற கோஷத்துடன் முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும், 3.5 லட்சம் தமிழர்களை காப்பாற்ற வேண்டி சீமான் அழைத்த கூட்டத்திற்கு, *மானமுள்ள தமிழனாய்* சென்று வந்தது ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது. என்னை போல், எம் இலங்கை சகோதரர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டி முடியாமல் மனதிற்குள் வெம்பி தவிக்கும் ஆயிரக்கணக்கான மானமுள்ள தமிழர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

சாதி ,மதம் அனைத்தையும் தாண்டி தமிழனை கட்டுப்படுத்தும் பெரும் பூதமாய் அரசியல் கட்சிகள் மாறி இருப்பதாய் கண்கூடாய் பார்க்கமுடிந்தது. தமிழன் என்ற உணர்வு சேர்த்தாலும், நான் இந்த கட்சிக்காரன் என்ற ஈகோ தான் பெரிதாக போகிறது. கட்சிகளை சாராத so-called நாகரிக, மிடில் கிளாஸ் தமிழனுக்கு தமிழ், தமிழுணர்வு இதை பற்றியெல்லாம் அக்கறையே இருப்பதில்லை. அக்கறை கொண்ட பெரும்பான்மை பாமர தமிழனும் கட்சி வேறுபாடுகளால் சிதறி ஓடி விடுகிறான். அதனால் தான் இவ்வுளவு துரோகம் செய்தும் காங்கிரஸ் நாதரிகளால் "இப்பாரினில் சிறந்த நற்றமிழ் நாட்டில்" கட்சி நடத்த முடிகிறது. இதையே இவர்கள் கர்நாடகத்திலோ, மகாராஷ்டிராவிலோ செய்து விட்டு தேர்தலில் வெற்றியும் பெறுவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இதனை தடுத்து கட்சி பேதங்களை தாண்டி மக்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இந்த "நாம் தமிழர்" முயற்சியை இவர்கள் மேற்கொண்டு இருப்பது ஆறுதல் தரும் ஒன்று. இதற்கான வழிமுறைகளில் ஒன்றாக மேடையில் கட்சி வேட்டி கட்டிய எவரையும் ஏற அனுமதிக்கவில்லை.
மேலும், இங்குள்ள அனைத்து கட்சிகளும் எதோ ஒரு வகையில் ஈழ பிரச்சனையில் நமக்கு துரோகம் செய்து வரும் போதிலும், அத்தலைவர்களை பற்றிய விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டன.
இவ்வாறாக தமிழனை ஒன்றிணைத்து கூட்டம் வெற்றிகரமாகவே நடந்தது. கூட்டமும் திருப்தியான அளவிற்கு கூடியதாகவே எனக்கு பட்டது. சீமான் பேச்சில் எப்பொழுதும் இருக்கும் வேகம் சற்று குறைவாய் இருந்தது, சில தமிழர்களின் ஏமாற்றத்துக்கு காரணமாக போனாலும் அதற்கான காரணிகளை அவர்கள் தெளிவாய் கூறிவிட்டார்கள். இந்த புதிய முயற்சியும் நம்பிக்கை தருவதாய் உள்ளது.

கூட்டத்தில் பேசியவர்கள் உதிர்த்த சுவராஸ்யமான, என்னை கவர்ந்த பகுதிகளை அடுத்த இடுகை இல் குறிப்பிடுகிறேன்.


எம் தலைவன்.

மானமுள்ள தமிழர்களுக்கு,
நம் தலைவன் அண்ணன் பிரபாகரன் நலமுடன் உள்ளார். யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.

அயோக்கியன் அழகிரி அணிவகுத்து வருகிறான் - கவனம் !!

எனதருமை மானங்கெட்ட மதுரை மக்களே!

வணக்கம். ஒரு வருசத்துக்கு முன்னாடி ஒரு குடும்பத்துக்குள்ள நடந்த கோஷ்டி தகராறுல தினகரன் ஆபீஸ் ல புகுந்து ரெண்டு அப்பாவி இளைஞர்கள கொன்னுடாங்க. அதுக்கு காரனமான Mr.சண்டாளன் தான் இப்ப MP யா போகனும்னு நம்ம கிட்ட பிச்ச கேட்டு வந்துட்டு இருக்கார். பிச்ச கேக்கும் போது கூட banner கட்டி , கொட்டடிச்சு வந்து கேக்குறது தான் அண்ணன் பழக்கம் போல!! நாசமா போனவன். யார் ஆபீஸ் ல போய் ரெண்டு பேர எரிச்சாங்களோ அதே பத்திரிகை தான் , மாமா, மச்சான்னு உறவு கொண்டாடிட்டு திரியுறாங்க!! யோசிச்சு பாருங்க, இந்த ****** மவனுங்க போட்ட சண்டைல புள்ளைய பறிகொடுத்தவுங்களுக்கு எப்பிடி இருக்கும்னு?!!

சரி, இப்ப விஷயம் என்னன்னா, வழக்கம் போல எல்லாரும் கொடுத்த 500 சந்தோசமா வாங்கிகிடீங்க. சிலர் 5000 வரைக்கும் கூட ரொம்ப நியாயமாவே எதிர்பாக்குறீங்க!! correct தான் உங்க எதிர்பார்ப்பு! கொஞ்ச நஞ்சமவா சம்பாரிச்சு வச்சுருகான் சண்டாள பய!!

ஆனா கொடுத்த காசுக்கு கடமை தவறாம ஒட்டு போடறேன்னு போட்டு இந்த தடவையும் அந்த அயோக்கியன ஜெய்க்க வச்சுடாதீங்க! மூணு தடவையா தொடர்ந்து உங்க விசுவாசத்த காமிச்சது போதும் பதர்களே!!! எனக்கெல்லாம் வாய்ப்பு கெடச்சா மதுரை மக்கள் எல்லாரையும் நிக்க வச்சு கால்ல விழுந்து நாளும், அவனுக்கு ஒட்டு போடதீங்க நு கேட்டுக்குவேன். வேணாம் மூடர்களே!! இந்த தடவையும் வெக்கங்கெட்டு, ரோஷங்கேட்டு அவனுக்கு ஒட்டு போட்டீங்கன்னா அந்த பாவத்த கழிக்க உங்களுக்கு வழியே கெடயாது சொல்லிட்டேன் :-(

இப்படிக்கு,
எதோ ஒரு கையாலாகாத சக மதுரைவாசி

சுஜாதா !!!

சொல்லும் போதே ஒரு தனி உற்சாகம் பிறக்கிறது.
என்ன மாதிரி எழுத்து யா?? சே, ஒரு சூரியன், ஒரே ஒரு அஞ்சா நெஞ்சன் இந்த மாதிரி புருடா கெல்லாம் நடுல ஒரே ஒரு சுஜாதா தான்னு சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும். சுஜாதா இயல்னு புதுசா தமிழ் இலக்கியத்துல ஒரு பிரிவு கொண்டு வந்தா, அதுக்கு முதல் ஆதரவு குரல் என்னோடது தான்.:-)

இன்னும் அழகா நியாபகம் இருக்கு! ஒன்பதாவது படிக்கும் போது, விகடன்ல கற்றதும் பெற்றதும்ல ஆரம்பிச்சது. அம்மா கிட்ட பிறகு சுஜாதா பத்தி கேட்டு, புத்தகங்களை தேடி படிக்கச் ஆரம்பிச்சு, இன்னைக்கு வரைக்கும் அந்த எழுத்து மேல உள்ள ஆச்சர்யம் குறையாம இருக்கேன். சுஜாதா நூல் எதையாவது எடுக்கும் போதெல்லாம் விரல் தானா மூக்குக்கு போய்டுது ;-)

இளமை, வசீகரம், ஆழமான அதே சமயம் எளிமையான கருத்து, நக்கல், நையாண்டி, அழகான நடை என்ன தான் இல்ல?? என்னோட முக்கால்வாசி கருத்துக்களுக்கும் சுஜாதா சொல்ற கருத்துக்களுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கும். கடவுள நம்புறதுல தொடங்கி, சூப்பர் ஸ்டார் சினிமா வர. :-S . ஆனாலும் அந்த முரண்பட்ட எழுத்துகள் மேல கூட ஒரு தனி காதல் எனக்கு. Tat's சுஜாதா!

தொப்புள்ள பஞ்சு வரதுல இருந்து குவாண்டம் physics, சங்க கால இலக்கியம், எங்க காலத்து காதல் வரைக்கும் ஒரே நூல்ல எழுதுறது உங்களால தான் BOSS முடியும்!! உங்கள் இழப்பு நிச்சயம் ஈடு கட்ட முடியாத ஒரு நிகழ்வு:-( We really miss you dude!

என்னடா இவன் திடீர்னு சுஜாதா பத்தி பேச ஆரம்பிச்சுட்டான்னு பாக்குறீங்க :-S
சுஜாதாவின் 50 விஞ்ஞான சிறுகதைகள் னு ஒரு அருமையான நூல் கைல தவழ்ந்துட்டு இருக்கு!!
அதோட பாதிப்பு தாங்க:-)

பொருளாதார சீரழிவு- கணினியாளனின் பார்வையில்!

சமீபத்தில் விகடனில் இக்கவிதையை சந்திக்க நேர்ந்தது.
கவிஞர்- செல்வேந்திரன்
தலைப்பு-கற்றதனால் ஆன பயன்...

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிளித்தீர்கள்
பெண் குடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பளத்தின்
பெரும் பகுதியை
வரியென புடுங்குனீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களில் இருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டுனீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுதெருவுக்கு வந்து விட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றி
கேட்கிறோம்....
' கணினி மொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம் ?'

சவுக்கடி கவிதை -1 (பார்பன சதிகள்! )

“ சாதி மான்கள் சதித்துக் கொன்ற

மதுரை வீரனுக்கே

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாம்

திண்ணியத்தில் மட்டுமல்ல

தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது பீயை
என்சனம்”

.தமிழ் செல்வனின் வலை பூவில் கண்டது.

கவிஞர் மதி வண்ணனின் கவிதை என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கவிதையின் பின்னணியையும் அவரே விளக்கியுள்ளார்.

"அதிலிருந்து,
சிவன்,விஷ்ணு,அல்லா,ஏசு என எல்லாப் பெருந்தெய்வங்களுக்கும் புனிதமான பிறப்புக்கதைகள்
இருக்க மக்கள் சாமிகளான மாரியாத்தா ,காளியாத்தாக்களெல்லாம் சாதாரணமாக
சாணி பொறுக்கப் போன இடத்தில் ஆதிக்க சாதியாரால் வல்லாங்கு செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டவர்களாகவோ மதுரைவீர சாமியைப்போல சக்கிலிய குலத்தில் பிறந்து
உயர்சாதியான நாயக்கர் வம்சத்தில் பிறந்த பொம்மியைக் காதலித்த குற்றத்துக்காகக்
கொல்லப்பட்டவராகவோ இருக்கிறார்கள்."


சே, எவ்வுளவு ஏமாளி பிண்டங்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!! :-)

"பகவன்"=="பகலவன்"

என் தாத்தா, அதாவது அம்மா வின் தந்தை தீவிர தமிழ் விசுவாசி. திருக்குறளை விரும்பி படித்து அதற்கு உரை எல்லாம் எழுதி இருக்கிறார். பாவம், அந்த மிடில் கிளாஸ் மாதவனால், அதை வெளியிட எல்லாம் முடியவில்லை. வாழ்கையோடு போராடுவதிலேயே காலம் ஓடி விட்டது. ஆனால் அவர் திருக்குறளை பற்றி சொன்ன ஒரு கருத்து என்னுள் ஆழ பதிந்து விட்டது. நமது முதலாம் குரலை பற்றியது தான் அது.


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

இதில் வரும் "பகவன்" என்னும் சொல்லை கவனியுங்கள். இதை வள்ளுவன் தாய் தந்தையரை குறிக்கிறான் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் பகவன் என்பது தமிழ் சொல்லா?? நிச்சயமாக அப்படி தெரிய வில்லை. "பகவான்" என்றோர் சொல் உண்டு. ஆனால் அது சுத்த வட மொழி சொல். எனவே இதை கையான்டிருக்க கூடுமோ என்ற பேச்சுக்கே நாம் செல்லல் ஆகாது. பின் எதை தான் சொல்லா எத்தனித்து இருப்பான்?? என் தாத்தா சொல்லும் அருமையான விளக்கம் இதோ.,
"பகலவன், என்ற சொல்லை எங்கே மறந்து விட்டீர்கள் தமிழர்களே?, சூரியன் என்பது வட மொழி சொல். அதற்கு சரியான தமிழ் பதம் பகலவன் தானே?!! தனது முதல் குறளை ஏன் தமிழரின் முதற் கடவுள் ஆன பகலவனை வணங்கி வள்ளுவன் தொடங்கி இருக்க கூடாது?!!. அப்பகலவன் ஏன் திரிந்து பகவன் என்று மாறியிருக்க கூடாது??!! "
எப்படி?? என்னை மிகவும் யோசிக்கவும், வியக்கவும் வைத்த கருத்து இது!!

தமிழ் அன்பர்களே!! உங்களது கருத்துகளையும் இதை பற்றி பதிவு செய்யுங்களேன் :-)

Posted in | 3 comments

விதியே விதியே, என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!!


இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூரைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் முத்துக்குமார். இவர் பெண்ணே நீ மாத இதழில் கணினி துறையில் பணியாற்றி வந்தார்.

இன்று காலை மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனுக்கு வந்த அவர், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார்.

பின்னர் சட்டென்று தனது கையில் இருந்த மண்ணெண்ணையை மேலே ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்து போனது.

உடல் முழுக்க தீயுடன் சாஸ்திரி பவன் வளாகத்திற்குள் அங்குமிங்கும் அலறியபடி ஓடினார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அப்படியே ஒரு இடத்தில் விழுந்தார்.

உடனடியாக விரைந்து வந்த போலீஸார் முத்துக்குமார் உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் உடல் முழுவதும் கருகி விட்டதால் டாக்டர்களால் முத்துக்குமாரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

முத்துக்குமார் பெண்ணே நீ மாத இதழில் டிடிபி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தார்.

முத்துக்குமாருக்கு வயது 30. கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தார்.

வீரமரணம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு,

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


இவ்வாறு அவரது துண்டு அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது.

மக்களே, இத்தகவலை பரப்புங்கள். செவிடன் கருணாநிதிக்கும் அவனது வேஷதாரி குடும்பத்துக்கும், மற்றும் நம்மை ஏமாற்றி வரும் அனைத்து சொரணை கெட்ட அரசியல் வாதிகளுக்கும் புரியட்டும் நமது வேதனை.


தமிழ் ஈழம் வெல்லட்டும்!!

பெரியாரை அறிவோம்- கம் ஆன் மை தமிழ் people

யாரப்பா இந்த பெரியார்??? நான் அணிந்திருந்த பெரியார் படம் போட்ட t-shirt ஐ பார்த்து பல நண்பர்கள் கேட்ட கேள்வி இது. முதலில் கோபமாக தான் வந்தது. அப்புறம் யோசித்து பார்த்தால், இந்த மனிதரை பற்றி நானே எங்கே கேள்வி பட்டிருக்கிறேன். என் வீட்டில் பெரியாரை பற்றி பேசி, கேள்விப்பட்டு வளர்ந்ததனால் எனக்கு அவரை பற்றி தெரிந்திருக்கிறது. இல்லேன்னா எப்படி???
பாட நூல்களில் கிடையாது. டிவி யில் இந்த மாதிரி மனிதர்களின் பேரே வருவதில்லை. அரசியல் கட்சி பெருமக்களும், இப்போலாம் பெரியார் ங்கற வார்த்தையே use பன்றதில்ல.
மக்கள் சுத்தமா மறந்துட்டாங்க. பின்ன எப்படி பசங்க தெரிஞ்சுபாங்க??
இன்னமும் பெரியார் பேர கேட்டாலே காத பொத்துகிற //தமிழ் தாய்மார்கள்// இருக்க தன் செய்கிறார்கள் என்பது வெட்க கேடு :-(
இவங்க எப்படி பசங்களுக்கு பெரியார் இன் பெருமைகளை சொல்லுவாங்க. இவங்களுகே ஒரு தனி class எடுக்கனும் போல.
கேட்டா அவர் கடவுளை எதிர்த்தவர், மதத்தை வெறுத்தவர் சொல்றாங்க.
அவ்ளோ பெரிய தலைவர வெறும் கடவுள் எதிர்பாளரா மக்கள் முன்னாடி முன் நிறுத்து இருப்பது நாம அவருக்கு செய்யுற எவ்ளோ பெரிய துரோகம் தெர்யுமா??
அவர் மகளிர் முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்ற துறைகளில் ஆற்றிய மாபெரும் பனிய இன்றைய இளைஞர்களிடம் எடுத்துட்டு போறது நம்ம கடமை இல்லையா??
பொட்டலம் போட வேண்டிய நானும், மாடு மேய்க்க என் நண்பனும் இன்னைக்கு engineer ஆக போறோம்னா அதுக்கு உழைச்சது அந்த உயர்ந்த உள்ளம் தான??
அவர நெனச்சு வணங்க வேணாம். ஆனா இவர் யாருன்னு என் நண்பர்கள் கேகுரதெல்லாம் என்னால் பொறுத்துக்கவே முடியல.
வெளிப்படையா சொல்லனும்னா அருவெறுப்பா இருக்கு தமிழ்ர்களே!!
தயவு செஞ்சு அவர பத்தி தெரிஞ்சுகோங்க. உங்க நண்பர்கள்,உறவினர்கள், பிள்ளைகள் எல்லார்டையும் பேசுங்க அவர பத்தி.
"பெரியார்" ன்னு ஒரு படம் வந்துச்சு. எத்தனை பேர் பார்தேங்கனு தெரியல. எல்லாம் மெட்டி ஒலியும்உம், மன்மத ராசவுலயும் மூழ்கி இருந்திருபீங்கனு நெனக்குறேன்.
உங்களுக்காக நம்ம அரசு அந்த படத்துக்கு வரி சலுகை லாம் தந்துச்சு. நீங்களாம் வந்து பாக்கணும்னு. உங்களுக்கெல்லாம் தன் நேரம் இல்ல பாவம். என்ன பண்ணுவீங்க??
கேவலம், ஒரு bit படத்துக்கு வர்ற கூட்டம் கூட இல்ல நா போனப்போ!!!
சரி விடுங்க, இனிமேயாவது அந்த படத்த DVD ல வாங்கி பாருங்க.
உங்க வீட்டு இளைய சமுதாயதிட்டையும் போடு காட்டுங்க.
உங்களுக்காக தான்னோட 95 வயசு வரைக்கும் போராடிய ஒரு மனுசனுக்கு நீங்க காட்ற குறைந்த பட்ச நன்றி கடனா அது இருக்கட்டும்.
இனியும் அந்த t-shirt பாத்து அப்படி கேள்வி கேக்குற ஒரு தமிழன் இருக்க கூடாதுங்கறது தான் என்னோட சிறிய கனவு.
மாறுங்கப்பா!!!!!
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!! :-)

Posted in Labels: | 1 comments