மீண்டும் சுஜாதா!

அண்ணாத்தையின், "விஞ்ஞான சிறுகதைகள்" தொகுதி முழுவதும் படிச்சு முடிச்சிட்டேன்! என்ன மனுசன்டா சாமி??!!!
எவ்வளோ பெரிய கற்பனை எல்லாம் எனைய மாதிரி tube-light கூட கற்பூரம் மாதிரி புரிஞ்சுக்குற style-ல எழுதுறதுக்கு சுஜாதாவ விட்டா ஆளே இல்ல :D

அவதார் james cameron எல்லாம் பிச்ச எடுக்கணும் போல இவர்கிட்ட!!

"Keep it simple, sweet and stupid!" என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான அறிவியல் முன்னேற்றத்தை, எதிர்பார்க்கப்படும் கண்டுபிடிப்புகளை பாமரனின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது!

அதாவது கணினி உலகில் கூறப்படும் abstraction - தேவையான தகவல்களை *மட்டும்* தேவையானவர்களுக்கு தருவது - என்றதன் அடிப்படையில், ஒரு சாதாரண வாசகன் ஒரு விஞ்ஞான கதையில் வரும் சயின்ஸ் சமாச்சாராங்களை
அல்வா சாப்டற சந்தோசத்துடன் படிக்கச் செய்து, அதன் பின்னால் இருக்கும் இடியாப்ப சிக்கல் அறிவியல் கோட்பாடுகளை லேசாக தொட்டு சென்றுள்ளார். :)

மொத்தத்தில் ஒரு மிக சிறந்த புத்தகம்!

உயிர்மை வெளியீடு.

0 comments: