வீர வணக்கம்!

நாளை எம் இனத்திற்காக இன்னுயிர் ஈத்த திரு.முத்துகுமரன் அவர்களின் முதல் வருட நினைவு நாள்.
இங்கே மதுரையில் பாராளுமன்றத்தில் தைரியமாக உட்காந்திருக்க கூட வக்கில்லாத அஞ்சா கு, சாரி நெஞ்சனுக்கு பிறந்த நாளாம். ஊரையே மறைத்து விளம்பர தட்டிகள் வைத்து அசிங்கபடுத்தி இருக்கிறார்கள்.
நடுவுலே ஏதாவது உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தும் தட்டிகள் வைத்தல் கூட தெரியாது போல :(
சரி நம்மளால முடிஞ்சது - ஒரு பதிவாவது எழுதுவோம்னு....

நெறைய பேசியாச்சு சொல்லியாச்சு! முத்துகுமரன் தற்கொலை செய்து கொண்டவர். அவரை எவ்வாறு ஒரு வீரனாக கருத முடியும் என்று நெறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். ஆனா அவருடைய கடைசி கடிதத்தை முழுசாக படித்தவர்கள் உண்மையை புரிந்திருப்பார்கள்.

ஒரு மோசமான நிலைமையை எதிர்கொள்ள தைரியம் இன்றி தப்பிக்க நினைத்து தற்கொலை செய்பவர்கள் கோழைகள்!! தமக்கு போராட களம் கிடைத்தும் அதை தவறவிட்டு, களமிறங்க அச்சம் கொண்டு ஓடுகிறவர்கள் கோழைகள்!! ஆனால் அந்த களம் அமைவதற்கு ஒரு உயிர் வேண்டும், அதற்கு நான் என்னை தருகிறேன் என்று முன்வந்த எங்கள் மாவீரன் முத்துகுமரன்.

தன் உடலையே ஆயுதமாக ஏந்தி போராட வேண்டி அவன் உயிர் நீத்தான்! போரட்டதற்கு அஞ்சி உயிர்நீக்கவில்லை.

அவருடைய கடைசி எழுத்துக்கள் உணர்ச்சிபெருக்கில் உயிர் போகும் அவசரத்தில் எழுதியவை அல்ல! மிக சிறந்த ஆழமான கருத்தாழம் மிக்க ஒருவனுடைய மனக்குமுறலையும், போராட்ட நெறிமுறைகளையும் விளக்குவதாக இருந்தது!!

இத்துடன் அந்த கடிதத்தை இணைத்து நான் இட்ட பதிவின் லிங்கை[1] இணைத்துள்ளேன்.

திரு.முத்துக்குமார் அவர்களுடைய அசைகளில் ஒன்றை கூட நாம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் ஊரை சுரண்டும் படிக்காத தற்குறி _____ ஒன்று இங்கு ஊரையே அசிங்கபடுத்தி பிறந்த நாள் கொண்டாடுகிறது!!

என்ன கேவலமான புழுக்களை போன்ற வாழ்க்கை இது??

[1] http://azhaguselvan.blogspot.com/2009/02/blog-post.html

0 comments: